நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரம்

0 166

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் மாதேஸ்வரன் மரூர்பட்டி, வீசாணம், வேட்டாம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

திண்டுக்கல் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் எஸ்டிபிஐ வேட்பாளர் முகமது முபாரக்கை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர், அதிமுக ஆட்சிகால திட்டங்களை விளக்கி வாக்கு சேகரித்தனர்.

மதுரை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் புதூர் பகுதியில் வாக்கு சேகரித்போது, அவருக்கு சால்வை அணிவித்தும், மலர்தூவியும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பொள்ளாச்சி தொகுதி பாஜக வேட்பாளர் வசந்த் ராஜன் பொன்னேராஜபுரம் பகுதியில் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments