தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியிடத் தடை... ஏப்ரல் 19 காலை 7 மணி முதல் அமல்: தேர்தல் ஆணையம்

0 283

மக்களவைத் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு  நடைபெறும் ஏப்ரல் 19 காலை 7 மணி முதல் அனைத்து வாக்குப்பதிவுகளும் முடிவடைந்து 48 மணி நேரம் வரை, அதாவது ஜூன் ஒன்றாம் தேதி மாலை 6.30 வரை எந்தவித தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பையும் வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட 4 மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்களும், 12 மாநிலங்களில் இடைத்தேர்தல்களும் நடைபெறுகின்றன. இவை அனைத்துக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments