சோமாலியா கடல் கொள்ளையர்களிடமிருந்து ஈரான் கப்பலில் இருந்த 23 பாகிஸ்தான் ஊழியர்கள் இந்தியக் கடற்படை மீட்பு

0 280

ஏடன் வளைகுடா பகுதியில் கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட இருந்த ஈரான் மீன்பிடிக் கப்பலை இந்தியக் கடற்படைக் கப்பல்கள் பத்திரமாக மீட்டன. அந்தக் கப்பலில் இருந்த 23 பாகிஸ்தானிய தொழிலாளர்களும் விடுவிக்கப்பட்டனர்.

ஈரான் மீன்பிடிக் கப்பலை கடத்தியதாக கிடைத்த தகவலை அடுத்து சுமேதா மற்றும் திரிசூல் ஆகிய ஏவுகணை தாங்கிய இந்தியக் கடற்படையின் இரண்டு கப்பல்கள் உதவிக்கு விரைந்தன.

கடல் கொள்ளையர்களை 12 மணிநேர முற்றுகைக்குப் பின்னர் சரண் அடைய வைத்து ஈரான் கப்பலையும் அதில் இருந்த பாகிஸ்தானியர்களையும் இந்தியக் கடற்படைக் கப்பல்கள் மீட்டன.


எந்த நாட்டவராக இருந்தாலும் கடல் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய கடற்படை உறுதி கொண்டிருப்பதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments