அமைச்சர் மாப்பிள்ளை தான் ஃபுல் சப்போர்ட் போலீஸ் விட்டுட்டாங்க..! ஆடியோ வெளியிட்ட ரவுடி

0 600

தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் பள்ளி விழாவில் ஏற்பட்ட தகராறில் ஏ-பிளஸ் கேட்டகிரி ரவுடி என்று அழைத்துச்செல்லப்பட்டவர், அமைச்சர் சிபாரிசினால் தன்னை போலீஸ் விடுவித்ததாக ஆடியோ வெளியிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியை சேர்ந்தவர் ராஜேஷ் இவர் மீது 17 வழக்குகள் உள்ளதாக கூறப்படுகின்றது. அங்குள்ள பள்ளியில் நடந்த தகராறு குறித்து எஸ்.பியிடம் அளித்த புகாரின் பேரில் சிறப்புத்தனிப்படை போலீசார் ராஜேஷை பிடித்துச்சென்றனர்.

பின்னர் என்னவானதோ தெரியவில்லை ராஜேஷ் இரவோடு இரவாக விடுவிக்கப்பட்டார். இது குறித்து ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ராஜேஷ், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மாப்பிள்ளை ஜனகர் ஃபுல் சப்போர்ட் செய்து தனது கட்சி தேர்தல் பொறுப்பாளர் என்று கூறி தன்னை போலீசிடம் இருந்து விடுவித்ததாக தெரிவித்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments