புனித வெள்ளியை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று சிறப்பு திருப்பலி உள்ளிட்ட சிறப்பு வழிபாடு

0 206

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்த தினமான புனித வெள்ளியையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்று வருகிறது. சென்னை, சாந்தோம் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

சேலம் நான்கு சாலை அருகே உள்ள குழந்தை ஏசு தேவாலயத்தில், சிலுவை சுமந்து வந்த இயேசு போன்று வேடமணிந்தவரை காவலர்கள் அடிப்பது போன்று ஊர்வலம் நடைபெற்றது. சேலம் ஆத்தூர் அருகே புனித ஜெயராக்கினி அன்னை தேவாலயத்தில் சிலுவைப்பாதை பவனியில் திரளானோர் பங்கேற்றனர்

புதுச்சேரி தூய ஜென்மராக்கினி அன்னை தேவாலயத்திலிருந்து தொடங்கிய சிலுவைப் பாதை பேரணியில் பேராயர் சிலுவையை சுமந்து முன்னே செல்ல ஏராளமானோர் பின்தொடர்ந்து சென்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் பகுதியில் உள்ள துண்டத்துவிளை புனித அந்தோணியார் தேவாலயத்தில் 4 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற சிலுவைப்பாதை பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments