சென்னையில் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு

0 276

சென்னை ஆழ்வார்பேட்டையில் இயங்கிவரும் செக்மெட் கிளப்பில் மேற்கூரை இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில், அந்த கட்டிடத்தின் உறுதி தன்மை குறித்து அதிகாரிகள் விடிய விடிய சோதனை மேற்கொண்டனர்.

கேளிக்கை விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை நேற்றிரவு திடீரென இடிந்து ஊழியர்கள் மீது விழுந்ததில் மணிப்பூரைச் சேர்ந்த திருநங்கை உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

அருகே நடைபெற்றுவரும் மெட்ரோ ரயில் பணிகளால் ஏற்பட்ட அதிர்வுகள் விபத்துக்கு வழிவகுத்திருக்கலாம் என சந்தேகம் எழுந்த நிலையில், 240 அடி தொலைவில் மெட்ரோ பணிகள் நடந்துவருவதால் விபத்துக்கும், தங்களுக்கும் தொடர்பில்லை என மெட்ரோ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

விடுதியின் பொறுப்பாளர் சதீஷ் யாதவ் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், கேளிக்கை விடுதிக்கு சீல் வைக்கப்படும் எனத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments