5 சவரன் நகைக்காக அத்தையை கத்தியால் குத்தி கொலை செய்த நபர் கைது

0 378

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே சொந்த அத்தையின் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்து, 5 சவரன் தாலிச் செயினை கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கனகவல்லிபுரம் கிராமத்தை சேர்ந்த குமாரின் மனைவி சரஸ்வதி வீட்டில் சடலமாக கிடந்த நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு புகார் அளிக்கப்பட்ட 6 மணி நேரத்தில் அவரது சகோதரி மகன் அசோக் என்பவரை கைது செய்தனர்.

பணம் கேட்டு தராததால் சரஸ்வதியை கொலை செய்ததாக அசோக் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments