பானை சின்னம் கிடைக்குமா ? கிடைக்காதா ? பானைக்கு ஓட்டு கேட்கும் தொல் திருமாவளவன்..!

0 356

சிதம்பரம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் திருமாவளவன், தனது குலதெய்வ கோவிலில் சாமி கும்பிட்டு விட்டுவெளியே வந்ததும் ஆதரவாளர்கள் மாலை மரியாதை செய்தார்கள்

இன்னும் விசிகவுக்கு எந்த சின்னமும் ஒதுக்கப்படாத நிலையில், திருமாவளவனுக்கு பொன்னாடை அணிவித்த தொண்டர், நமது சின்னம் பானை சின்னம் என்று கோஷமிட திருமா உள்ளிட்ட அனைவரும் திரும்ப சொல்லி உற்சாகம் அடைந்தனர்

அந்த நபர் வருங்கால தமிழக முதல் அமைச்சர் திருமா... என்று கோஷமிட்டதும், திருமாவளவன் உள்ளிட்ட அனைவரும் கோஷத்தை நிறுத்தி விட்டு அந்த நபரை விசித்திரமாக பார்த்தனர்

திருமாவுக்கு அருகில் சிறுவன் கோஷமிடாமல் முனங்கியபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தான், திருமாவளவன் அந்த சிறுவனிடம் நமது சின்னம் என்ன ? என்றதும் அவனும் பானை என்றான்

இதற்கிடையே பானை சின்னத்தை ஒதுக்குமாறு டெல்லி நீதிமன்றத்தை வி.சி.க நாடிய நிலையில், விரைந்து முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தேர்தல் ஆணையம் பானை சின்னம் ஒதுக்க மறுத்து விட்டது குறிப்பிடதக்கது 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments