தங்கள் சின்னம் இல்லாமல் யாரும் வாக்கு கேட்க முடியாது -சீமான்
யார் வேண்டுமானாலும் தங்கள் சின்னத்திற்கு வாக்கு கேட்கலாம், ஆனால் தங்கள் சின்னமான மைக் இல்லாமல் யாரும் வாக்கு கேட்க முடியாது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
சென்னையில் தங்கள் கட்சி சின்னம் மற்றும் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் ஆணையமே தங்களுக்கு எது சரி என்று தெரிந்துதான் விவசாயி சின்னத்தைப் போல, புரட்சிக்கு வித்திடும் மைக் சின்னத்தை கொடுத்துள்ளதாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றம், மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி என்ற அடிப்படையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
கன்னியாகுமரியில் இருந்து தாம் தேர்தல் பரப்புரை தொடங்க இருப்பதாகவும் சீமான் தெரிவித்தார்.
Comments