மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், ஏராளமானோர் மனுத் தாக்கல் செய்தனர்.

0 190

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால், ஏராளமானோர் மனுத் தாக்கல் செய்தனர்.

திருவண்ணாமலை தொகுதி பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன், தேர்தல் அலுவலர் பாஸ்கர பாண்டியனிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். 

திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் பிரபுசங்கரிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் வளர்மதியிடம், அரக்கோணம் பாமக வேட்பாளர் பாலு வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

தஞ்சை தொகுதியில் திமுக வேட்பாளர் முரசொலி, பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் இருவரும், தேர்தல் அலுவலர் தீபக் ஜேக்கப்பிடம் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி பாமக வேட்பாளர் தேவதாஸ், தேர்தல் அலுவலர் ஷ்ரவன்குமாரிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments