12 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன நகைகள்... தனியார் லாக்கரில் மீண்டும் சோதனையை தொடங்கிய போலீசார்

0 299

12 வருடங்களுக்கு முன்பு தனியார் லாக்கரில் காணாமல் போன 2 புள்ளி 3 கிலோ தங்கம் மற்றும் பணம் தொடர்பான வழக்கை நீதிமன்ற உத்தரவுபடி சென்னை காவல்துறை மீண்டும் கையிலெடுத்து விசாரணை மேற்கொண்டுள்ளது.

சவுகார்ப்பேட்டையைச் சேர்ந்த தர்மேந்திர கோத்தாரி என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் 2012ம் ஆண்டில் தமது தாய் 2 புள்ளி 3 கிலோ தங்கத்தை பாதுகாப்பதற்காக தனியார் நிறுவன லாக்கரில் வைத்ததாகவும், இந்த நகைகள் மற்றும் பணம் திருட்டு போனதாக தமக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சவுகார்பேட்டை மின்ட் தெருவில் உள்ள தனியார் லாக்கர் செக்யூரிட்டி நிறுவனத்தில் யானை கவுனி போலீசார் சோதனை மேற்கொண்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments