கோவை மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சம் தலைதூக்கிவிட்டது - அண்ணாமலை

0 369

கோவை மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சம் தலைதூக்கிவிட்டததாகவும், நீர்ப்பாசனம் என்பது தமிழக ஆட்சியாளர்களுக்கு கெட்ட வார்த்தையாக மாறியுள்ளதாகவும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஆனைமலை நல்லாறு திட்டத்தை செயல்படுத்த முயற்சிப்பேன் என வாக்குறுதி அளித்தார்.

அரசியலில் தான் விடுமுறை எடுத்ததே இல்லை என்றும் தனது அம்மாவை பார்த்தே 2 மாதங்கள் ஆகிவிட்டதாகவும் அண்ணாமலை தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் உள்ள தேவையில்லாத சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க முயற்சி செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments