சீமான் தங்கச்சின்னா சும்மாவா... நெருப்புடா பிரபாகரன் பெயரில் உறுதிமொழி ஏற்றார்..!

0 655

சீமான் சின்னம் என்ன ? என்ற கோஷத்துடன் நாகப்பட்டினம் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா ஆதரவாளர்கள் புடைசூழ வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார்

வேட்பாளர் அணிந்திருந்த துண்டில் விவசாயி சின்னம் அச்சிடப்பட்டிருந்ததால், சின்னம் மறைக்கப்பட்ட துண்டு ஒன்றை அவருக்கு அணிவித்து அனுப்பி வைத்தனர்

உள்ளே சென்று கலெக்டர் முன்பு உறுதி மொழி ஏற்ற கார்த்திகா, தலைவர் பிரபாகரன் மீது சூளுரைத்து என்று கூறியதால் அருகில் இருந்த பெண் அரசு ஊழியர் அதிர்ச்சி அடைந்தார்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கார்த்திகாவிடம் உங்கள் பிரதமர் வேட்பாளர் யார் ? என்று கேட்டதற்கு, நாங்கள் 40 பேரும் பிரதமரை தேர்ந்தெடுக்க டெல்லிக்கு செல்லவில்லை, காவிரியில் தடையின்றி தண்ணீர் பெறுவதற்கு சண்டை போடுவதற்காக தேர்தலில் வென்று டெல்லி செல்வோம் என்றார்

தமிழர் அல்லாதவர்கள் ஆட்சியால் காவிரி பிரச்சனையில் தீங்கிழைத்து விட்டதாக குற்றஞ்சாட்டினார் கார்த்திகா

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments