மாஸ்கோ தாக்குதல் தொடர்பாக கைதான 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்... பணத்திற்காக மக்களை சுட்டுக்கொன்றதாக வாக்குமூலம்

0 310

மாஸ்கோ இசை நிகழ்ச்சியில் 133 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.

க்ரோகஸ் சிட்டி ஹாலில் கடந்த 23ம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் 3 பேர் பாஸ்மேன்னி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். காயங்களுடன் சக்கர நாற்காலியில் நீதிமன்ற அறைக்கு அழைத்து வரப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியபோது, பணத்திற்காக மக்களை சுட்டுக்கொன்றதாக வாக்குமூலம் அளித்தனர்.

அவர்களை மே 22 வரை விசாரணைக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments