நெல்லை, மயிலாடுதுறை தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும்: செல்வப்பெருந்தகை

0 245

தமிழகத்தில் மக்களவை தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ள நிலையில், நெல்லை, மயிலாடுதுறை ஆகிய மக்களவை தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்லில் போட்டியிடும் வேட்பாளர்களின்பட்டியல் இன்று மாலைக்குள் வெளியாகும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

நெல்லை தொகுதியில் பீட்டர் அல்போன்ஸ், ராமசுப்பு, ரூபி மனோகரன், அவரது மகன் அசோக் ரூபி மனோகரன், பால்ராஜ், ராஜேஷ், ராபர்ட் புரூஸ் ஆகியோர் போட்டியிட விரும்புவதாக தெரிகிறது.

இவர்கள் தரப்பில் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படுவதால், வேட்பாளரை அறிவிப்பதில் காங்கிரஸ் தலைமை தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. மயிலாடுதுறை தொகுதியில் ராகுல் காந்திக்கு நெருக்கமான பிரவீன் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த தேர்தலில் திருநாவுக்கரசர் போட்டியிட்டு வென்ற திருச்சி தொகுதி இந்த முறை ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், அவர் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்குமாறு அக்கட்சியின் தலைமையிக்கு அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments