மீன் மற்றும் இறைச்சி அங்காடியில் வாக்கு சேகரித்த மன்சூர் அலிகான்

0 370

நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கழகத் தலைவருமான மன்சூர் அலிகான் வேலூர் மீன் மற்றும் இறைச்சி அங்காடியில் உள்ள கடைகளில் மீன்களை வெட்டி வியாபாரம் செய்தவாறு வாக்கு சேகரித்தார்.

முதல் மீனை கையில் எடுத்து சுத்தம் செய்யும்போதே அது அவரது கையிலிருந்து நழுவி கீழே விழுந்தது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகானிடம், மற்ற கட்சிகளுக்கு பெரிய தலைவர்கள் வந்து வாக்கு சேகரிக்கின்றனர், அப்படி உங்கள் கட்சிக்காக யார் வரப்போகிறார்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு தனக்காக பெரிய தலைவர்கள் யாரும் வந்து வாக்கு சேகரிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தாம் தான் வேலூரில் வெற்றி பெறப் போகிறேன் மன்சூர் அலிகான் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments