நிதி நெருக்கடியால் இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய வணிகர்கள் விருப்பம் - பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்

0 315

இந்தியாவுடன் மீண்டும் வர்த்தகத்தை தொடங்க பாகிஸ்தான் விரும்புவதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் முகமது இஷாக் தர் தெரிவித்துள்ளார்.

லண்டனில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பெரும் நிதிநெருக்கடியை சந்தித்து வரும் பாகிஸ்தான் தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய ஆவலாக இருப்பதாக கூறினார்.

2019ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானுடன் வர்த்தகத்தை இந்தியா நிறுத்தி விட்டதாகவும் வர்த்தக உறவை மீண்டும் ஏற்படுத்துவது குறித்து பாகிஸ்தான் அரசு தீவிரமாக பரிசீலிப்பதாகவும் இஷாக் தர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments