காசா மருத்துவமனையில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை.. 170 பேரை சுட்டுக் கொன்றதாக இஸ்ரோல் ராணுவம் அறிவிப்பு..!

0 403

காசா மருத்துவமனையில் பதுங்கியிருந்த ஆயுதமேந்திய 170 பேரை சுட்டுக் கொன்றதாக இஸ்ரோல் ராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

இஸ்ரேல் படைகள் மார்ச் 18ம் தேதி அதிகாலை காசா நகரில் உள்ள அல் ஷிபா மருத்துவமனையில் அதிரடியாக ஊடுருவினர். அங்கு ரகசிய சுரங்கப்பாதையில் பதுங்கியிருந்த ஹமாஸ் படையினரோடு துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர்.

இச்சண்டை கடந்த சில நாட்களில் நாள் முழுவதும் நீடித்தது. இந்நிலையில் நேற்று மருத்துவமனையில் இருந்த 170க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது. 350க்கும் மேற்பட்ட ஹமாஸ் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments