கோவையில் அதிமுக- திமுகவுக்கு இடையேதான் போட்டி: எஸ்.பி.வேலுமணி

0 338

கருத்துக்கணிப்பு என்ற பெயரில், எதிர்வரும் மக்களவை தேர்தலில் அ.தி.மு.க.வை விட பா.ஜ.க அதிக வாக்கு சதவீதம் பெறும் என சிலர் கருத்து திணிப்பில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரித்தார்.

கோவை சின்னியம்பாளையத்தில் நடந்த கூட்டத்தில், அ.தி.மு.க கோவை வேட்பாளர் சிங்கை  ராமச்சந்திரன், பொள்ளாச்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் நீலகிரி வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனை அறிமுகப்படுத்தி பேசிய எஸ்.பி.வேலுமணி, கோவை மக்களவைத் தேர்தல் களத்தில் அதிமுக- திமுகவுக்கு இடையேதான் போட்டி என்றார். 

தி.மு.க.தான் எப்போதும் தங்களது எதிரி எனக் குறிப்பிட்ட எஸ்.பி.வேலுமணி, கூட்டணி பேசிக்கொண்டே சில கட்சிகள் அதிமுகவுக்கு துரோகம் இழைத்ததாகவும் கூறினார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments