புதியவர்களுக்கு வாய்ப்பளித்தால் தான் கட்சி வளரும்: இ.பி.எஸ்

0 293

புதியவர்களுக்கு வாய்ப்பளித்தால் தான் கட்சி வளரும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். சேலம் மாவட்டம் ஓமலூரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்துக்குப் பின் பேட்டியளித்த அவரிடம், அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் அதிகளவிலான புதுமுகங்கள் இடம் பெற்றிருப்பது பற்றி கேட்கப்பட்டது. 

அ.தி.மு.க. சொந்த பலத்தில் தேர்தல் களம் காணுவதாக குறிப்பிட்ட இ.பி.எஸ்., கூட்டணியை நம்பி அ.தி.மு.க. இல்லை என்றார்.

கடந்த 3 ஆண்டுகளில் எங்கு பார்த்தாலும் ஊழல், போதைப் பொருள் அதிகரித்துள்ளதாகவும், மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றால் தான் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments