பசிபிக் பெருங்கடலை அணுக உரிமை கோரி பொலிவியாவில் அணிவகுப்பு

0 245

நான்கு புறமும் நிலத்தால் சூழப்பட்ட பொலிவியா நாடு, அருகில் உள்ள பசிபிக் பெருங்கடலை அணுகுவதற்கு அண்டை நாடான சிலி அனுமதி அளிக்கக்கோரி பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு நடத்தியது.

சர்வதேச கடல் தினத்தை பெருமைப்படுத்தும் வகையில், பொலிவியா நாட்டின் லா பாஸ் நகரில் அதிபர் லூயிஸ் ஆர்ஸ் முன்னிலையில் ராணுவ வீரர்கள் அணி அணியாக சென்றனர். 

நிகழ்ச்சியின் போது, பசிபிக் பெருங்கடலில் பொலிவியாவுக்கும் உரிமை உள்ளது என்று கோரிய மறைந்த எட்வர்டோ அபரோவாவின் உருவச் சிலைக்கு அதிபர் லூயிஸ் ஆர்ஸ் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments