சட்டவிரோத கும்பலுடன் தொடர்பு உள்ள சேலையூர் காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ. வங்க தேச ராணுவத்தால் கைது

0 504

சட்டவிரோதமாக இந்திய எல்லையை கடக்க முயன்றதாக சேலையூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றிய ஜான் செல்வராஜ் என்பவரை வங்க தேச ராணுவம் கைது செய்ததாக தகவல் கிடைத்துள்ளதாக சென்னை காவல்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜான் செல்வராஜை கண்ணகி நகருக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், அடிக்கடி விடுப்பு எடுத்து வந்த அவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் விடுப்பில் சென்றதாக கூறப்படுகிறது.

குற்றவாளிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லும் பணியில் இருந்த ஜான் செல்வராஜ்க்கு சட்டவிரோத கும்பலுடன் தொடர்பு இருந்ததா என விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments