சென்னை, தாம்பரம் அருகே வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி ஒத்திகை பார்த்த வழிப்பறி கொள்ளையன் கைது

0 335

சென்னை, தாம்பரம் அருகே வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி ஒத்திகை பார்த்த வழிப்பறி கொள்ளையன் கோல்டன் மணி மற்றும் வெடிகுண்டு தயாரிப்பதற்கு உடந்தையாக இருந்த மேலும் 3  பேரை போலீசார் கைது செய்தனர்.

கடப்பேரி பகுதியில் வசிக்கும் முருகன் என்பவரின் வீட்டின் மேற் கூரை மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது குறித்து அவர் அளித்த புகாரை விசாரித்து, திருநீர்மலை பகுதியில் பதுங்கியிருந்த மணியை போலீசார் கைது செய்தனர்.

போலீசாரிடம் இருந்து தப்பிக முயற்சித்து ஓட்டம் பிடித்த மணி அங்கிருந்த பெரிய பள்ளத்தில் விழுந்து கையில் முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். வழிப்பறியில் செய்யும்போது பயன்படுத்துவதற்காக நாட்டு வெடிகுண்டு தயாரித்ததாக விசாரணையில் மணி கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments