வி.சி.க.விற்கு பானை சின்னம் ஒதுக்கக்கோரி பல மாதங்கள் காத்திருப்பு: திருமாவளவன்

0 291

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கமல்ஹாசனை சந்தித்தனர்.

பின்னர் பேட்டியளித்த திருமாவளவன், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு உடனடியாக சின்னம் கிடைப்பதாகவும், மற்ற கட்சிகளுக்கு ஒதுக்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும் கூறினார். வி.சி.க.விற்கு பானை சின்னம் ஒதுக்கக்கோரி பல மாதங்களாக காத்திருப்பதாகவும், விரைவில் கிடைக்கும் என்று நம்புவதாகவும் அக்கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments