பா.ஜக கூட்டணியில் 3 தொகுதிகள் கேட்டு ஏமாந்த ஓ.பி.எஸ்..!

0 572

ஓ.பி.எஸ்ஸின் அதிமுக தொ.உ.மீ.கு அமைப்பு, பா.ஜக கூட்டணியில் 3 தொகுதிகள் கிடைக்கும் என்று காத்திருந்து பெருத்த ஏமாற்றத்தை சந்தித்துள்ள நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எழும்பூரில் உள்ள சிராஜ் மகாலில் நடந்தது.

கூட்டத்துக்கு வரும் போதே ஓபிஎஸ்ஸுக்கு பின்னால் யார் வருவது என்று கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியும், சைதை பாபுவுக்கும் சண்டையிட்டுக் கொண்டனர்

தனிஅறையில் ஓ. பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜேசிடி. பிரபாகர், உள்ளிட்டோர் மாவட்டச்செயலாளர்களின் கருத்துகளை கேட்டிருந்த நிலையில் அமைப்பின் ஆலோசகரான பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டும் மேடையில் தனியாக அமர்ந்திருந்தார்

பா.ஜ.க கூட்டணியில் ஒரு தொகுதி மட்டுமே தருவதாகவும், அதுவும் தாமரை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்றும் நிர்பந்தித்ததால், தங்களின் எதிர்கால நலன் கருதி இந்த தேர்தலில் போட்டியிடாமல் வெளியில் இருந்து பா.ஜக.வை ஆதரிக்கபோவதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments