பாகிஸ்தான் அரசின் நிதிப் பற்றாக்குறை - மாதச் சம்பளத்தை விட்டுக்கொடுக்க பிரதமர், அமைச்சர்கள் முடிவு

0 283

பாகிஸ்தான் அரசின் நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு, பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் அனைவரும் தங்களது மாதச் சம்பளம் மற்றும் சலுகைகளை விட்டுக்கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

தேவையற்ற செலவினங்களைக் குறைப்பது தொடர்பான அமைச்சரவைக் கூட்டத்தில் இம் முடிவு எடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அரசு சார்பிலான வெளிநாட்டுப் பயணங்களை முன் அனுமதி இல்லாமல் மேற்கொள்ள வேண்டாம் எனவும் அமைச்சர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் உள்துறை அமைச்சர் மோஷின் நக்வி இருவரும் தங்களது மாதச் சம்பளத்தை விட்டுக்கொடுப்பதாக கடந்த வாரம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments