கோவில் யானைக்கு ரூ.25 லட்சத்தில் நீச்சல் குளம், தங்கும் அறை திறந்து வைப்பு...

0 314

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலின் 56 வயதான அபயாம்பிகை யானைக்கு 25 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட நீச்சல் குளம், தங்கும் அறையை ஆலயத்தின் தலைமை அர்ச்சகர் சுவாமிநாத சிவாச்சாரியார் திறந்து வைத்தார்.

சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு ஷவருடன் கூடிய நீச்சல் குளத்தில் கோவில் யானை உற்சாகமாக நீராடியது.

யானை நீராடியதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து செல்போனில் படம் பிடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments