தனியார் வங்கி மேலாளரை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சித்த பெண் உதவி மேலாளர், உள்பட 5 பேரை போலீசார் கைது

0 567

தனியார் வங்கி மேலாளரை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சித்த பெண் உதவி மேலாளர், உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் நகரில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி மேலாளர் கோபிநாத் கடந்த திங்கட்கிழமை அன்று இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, அவரை காரில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரது முதுகில் கத்தியால் குத்திவிட்டு தப்பிய நிலையில், பலத்த காயத்துடன் கோபிநாத் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிசிடிவி பதிவுகளை கொண்டு குற்றவாளிகளை கைது செய்து போலீசார் விசாரித்தனர். தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அதே வங்கியில் பணிபுரியும் பெண் உதவி மேலாளர் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து கூலிப்படையை அமர்த்தி கொலை திட்டம் தீட்டியது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் கூறினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments