அமெரிக்க பாதுகாப்பு அமைச்சருடன் ராஜ்நாத் சிங் தொலைபேசி வாயிலாக இருநாட்டு நல்லுறவு, பாதுகாப்பு குறித்து ஆலோசனை

0 193

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தொலைபேசி வாயிலாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இரு தரப்பு நல்லுறவு, மண்டல பாதுகாப்பு,  பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இந்தப் பேச்சுவார்த்தையில் இடம் பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு நாடுகளின் சரக்குக் கப்பல்களை கடல் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாக்கும் பணியில்  இந்தியக் கடற்படையினர் ஈடுபட்டு வருவதற்கு ஆஸ்டின் பாராட்டு தெரிவித்தார். இம்மாத இறுதிவரை நடைபெறும் கூட்டு போர் ஒத்திகையில் ஈடுபடுவது குறித்தும் இருவரும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments