வண்டலூர் ஆராவமுதன் கொல்லப்பட்ட வழக்கில் திமுக ஊராட்சி மன்றத் தலைவி முத்தமிழ்செல்வி கார் ஓட்டுநருடன் கைது

0 440

காட்டாங்குளத்தூர் திமுக ஒன்றிய செயலாளர் ஆராவமுதன் கொலை வழக்கில் வண்டலூர் திமுக ஊராட்சி மன்றத் தலைவி முத்தமிழ்செல்வியும் அவரது கார் ஓட்டுநர் துரைராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் ஏற்கனவே 10க்கும் மேற்பட்டோர் கைதாகியுள்ளனர். முத்தமிழ்செல்வியின் கணவர் விஜயராஜ், கடந்த 2016 ஆம் ஆண்டு வண்டலூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு தன்னுடைய மனைவி போட்டியிட மனுதாக்கல் செய்திருந்தார்.

அச்சமயத்தில் மர்ம கும்பலால் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டு கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலையில் ஆராவமுதன் பெயரும் அடிபட்ட நிலையில், அதற்குப் பழிவாங்கும் நோக்கில் முத்தமிழ்ச்செல்வி இந்தக் கொலையை அரங்கேற்றி இருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments