உரிய ஆவணங்கள் இல்லாத பணம், பரிசுப் பொருட்கள் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை

0 277

 காஞ்சிபுரம் அருகே வையாவூர், வாலாஜாபாத் பகுதிகளில் தனியார் நகைக்கடைகளுக்கு வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட 18 கிலோ தங்க நகைகள் மற்றும் 100 கிலோ வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் சோதனை சாவடி அருகே காரில் கொண்டு செல்லப்பட்ட 45 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூரின் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 3 லட்சத்து 81 ஆயிரம் ரூபாயைப் பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments