6 மாநில உள்துறைச் செயலாளர்கள் இடமாற்றம் மேற்கு வங்க டிஜிபி, மும்பை ஆணையரை மாற்ற உத்தரவு

0 279

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு பிறகு முதல்முறையாக அதிகாரிகளின் இடமாற்றத்தை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

மேற்கு வங்க டிஜிபி ராஜிவ் குமார், மும்பை மாநகராட்சி ஆணையர் இக்பால் சஹால் ஆகியோரை அவர்களது பதவியில் இருந்து விடுவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும், குஜராத், உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய 6 மாநிலங்களின் உள்துறைச் செயலாளர்களை இடமாற்றம் செய்ய அந்தந்த மாநில அரசுகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்யவும் மாநில அரசுகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments