சக பள்ளி மாணவர்கள் கேலி செய்வதால் அரசுப் பள்ளியை முற்றுகையிட்ட மாணவிகளின் பெற்றோர்
தேனி மாவட்டம் கொண்டமநாயக்கன் பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவிகளை அதே பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் கேலி செய்வதாகக் கூறி பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.
தங்கள் குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்க்க உள்ளதாக பெற்றோர் தெரிவித்ததைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.
Comments