சென்னையில் 360 டிகிரியில் சுழலும் கேமரா உடன் 24 மணி நேரமும் செயல்பட கூடிய பறக்கும் படை வாகனங்கள்: மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்

0 313

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், சென்னையில் 360 டிகிரியில் சுழலும் கேமரா உடன் 24 மணி நேரமும் செயல்பட கூடிய பறக்கும் படை வாகனங்களை மாநகராட்சி ஆணையரும், தேர்தல் அலுவலருமான ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் நடத்தை விதிகளை நடைமுறைப்படுத்த சென்னையில் 14 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்றார். 16 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பறக்கும் படைகள் அனுப்பி வைக்கப்படும் என்றும், ரிப்பன் மாளிகையில் கட்டுப்பாடு மையம் செயல்படும் என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments