நாகப்பட்டினம் இனிப்பு கடையில் வாங்கிய இனிப்பில் புழு இருந்ததாக எழுந்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

0 543

நாகப்பட்டினம் கடைத்தெருவில் உள்ள உமா ஸ்வீட்ஸ் என்ற கடையில் வாங்கிய இனிப்பு பலகாரத்தில் புழு இருந்ததாக வாடிக்கையாளர் தொலைபேசியில் அளித்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்போது புகாருக்குள்ளான இனிப்பு இல்லாததால் அதனை சோதனைக்கு அனுப்ப முடியவில்லை என்று கூறிய அதிகாரிகள், தவறு நடந்தது உண்மை என இனிப்பகம் தரப்பில் ஒப்புக் கொண்டதால் எச்சரிக்கை மட்டும் விடுத்ததாக தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments