மக்களவைத் தேர்தல் தேதியை நாளை பிற்பகல் 3 மணியளவில் அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்

0 344

நாடாளுமன்ற தேர்தல் தேதி மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கான அட்டவணையை நாளை பிற்பகல் 3 மணிக்கு வெளியிட இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள தேர்தல் ஆணையம், 2024 மக்களவைத் தேர்தல் அட்டவணையுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகளும் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஸ்வர் குமார் மற்றும் சுக்வீர் சிங் சாந்து பதவியேற்ற நிலையில், டெல்லி தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அவர்களுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆலோசனை நடத்திய பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments