ஆன்லைன் மூலம் வலி நிவாரணி மாத்திரை வாங்கி சிரஞ்ஜி மூலம் நரம்பில் ஏற்றி போதையில் சுற்றி திரிந்த இளைஞர்கள்

0 380

கரூரில், வலி நிவாரணி மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து, சிரிஞ்சு மூலம் நரம்பில் செலுத்திக்கொண்டு போதையில் சுற்றி திரிந்த கல்லூரி மாணவர்களை பிடித்து விசாரணை நடத்திய போலீசார், ஆன்லைனில் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி அதிக விலைக்கு  விற்றுவந்த 6 பேர் கும்பலை கைது செய்தனர்.

போதை ஊசி செலுத்திக்கொள்பவர்கள் சோர்வாக காணப்படுவதுடன், 2 கைகளிலும் ஊசி செலுத்திக்கொண்டதற்கான தழும்புகள் இருக்கும் என தெரிவித்த போலீசார், பெற்றோர்கள் கண்காணித்து அவர்களை திருத்த வேண்டும் என கேட்டுக்கொண்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments