மீஞ்சூர் சாலையில் கான்கிரீட் தடுப்பான்களால் நேரிட்ட விபத்தில் பெண் உயிரிழப்பு

0 308

மீஞ்சூரை அடுத்த கொண்டக்கரை சந்திப்பில் கனரக லாரிகளை ஒழுங்குபடுத்த சாலையின் நடுவில் கோணலாக வைக்கப்பட்ட கான்கிரீட் தடுப்பான்களால் மீண்டும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

சுப்பாரெட்டிபாளையத்தைச் சேர்ந்த சுகுமார் தனது மனைவி அன்னபூரணியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பின்னால் வந்த லாரி இடித்ததில் நிலை தடுமாறி கான்கிரீட் தடுப்பானில் மோதி இருவரும் கீழே விழுந்தனர்.

அதில் அன்னபூரணி மீது லாரி சக்கரம் ஏறியதில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து, அப்பகுதியினர் கான்கிரீட் தடுப்பான்களை அகற்றக்கோரி வாகனங்களை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை தடுப்பு கற்களை அகற்றுவதாக போலீசார் அளித்த வாக்குறுதியை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments