தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரி வருகை போலீசார் மோப்ப நாய்களுடன் சோதனை

0 262

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பகுதிக்கு நாளை தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடியின் வருகையையொட்டி பொதுகூட்டம் நடைபெறும் மைதானம் அருகே போலீசார் மோப்ப நாய்களுடன் சோதனை மேற்கொண்டனர்.

கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் ஹெலிகாப்டரில் வந்திறங்கும் பிரதமர் சாலை மார்க்கமாக பொதுகூட்டம் நடைபெற இருக்கும் விவேகானந்தா கல்லூரி மைதானத்திற்கு செல்வதாக கூறப்பட்டுள்ளது.

அப்பகுதியில் 2,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


பாஜக கூட்டணி கட்சிகள் சார்பாக நாடாளுமன்ற தொகுதிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை பொது கூட்டத்தில் பிரதமர் அறிமுகம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments