குஜராத்தில் ரூ.85,000 கோடிக்கு ரயில்வே திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி

0 197

தேசத்தை கட்டமைக்கவே வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, சிலர் நினைப்பது போல் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அல்ல என்று கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம் சபர்மதியில் 10 புதிய வந்தே பாரத் ரயில்கள் உள்பட 85 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே திட்டங்களை தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர், தனது வாழ்க்கை ரயில்வே தண்டவாளத்தில் தான் தொடங்கியது என்பதால் ரயில்வே துறை முன்பு எவ்வளவு மோசமாக இருந்தது என்பது தனக்குத் தெரியும் என்றார்.

கடந்த தலைமுறையினர் அனுபவித்த துன்பங்களை நமது இளைஞர்கள் சந்திக்காமல் இருக்கவே வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகவும், இது மோடியின் உத்தரவாதம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments