ஒரு பக்கம் இந்தியக் குடியுரிமைச்சட்டத்தை வரவேற்க்கும் மக்கள் மறு பக்கம் எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்

0 308

இந்தியக் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்டதை பாஜகவினரும் இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தான் புலம்பெயர்ந்த இந்துக்களும் வரவேற்று பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடினர் .  

டெல்லியில் உள்ள மஜ்னு கிலாவில் வசிக்கும் பாகிஸ்தானின் சிறுபான்மை சிந்தி மக்கள் வரவேற்பு தெரிவித்தனர் .

இதே போல் போபாலிலும் சிந்தி மக்கள் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி வரவேற்றனர் .

பிரதமர் மோடி தேர்தலில் அளித்துள்ள முக்கியமான வாக்குறுதியை நிறைவேற்றியிருப்பதாக பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் எதிர்க்கட்சியினர் பல்வேறு இடங்களில் இச்சட்டத்தை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கவுஹாத்தியில் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய மக்களைப் பிளவுபடுத்தும் எந்த ஒரு சட்டத்திற்கும் எதிர்ப்புத் தெரிவிப்போம் என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments