ரம்ஜான் மாதம் தொடங்கியதையடுத்து போலீசார் பலத்த பாதுகாப்பு

0 214

ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு டெல்லியில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி பல்வேறு இடங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஜாமா மஸ்ஜித் பகுதியில் அமைதியை வலியுறுத்தி போலீசார் கொடி அணிவகுப்பை நடத்திய நிலையில், சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது பற்றி அமைதிக் குழுக்களுடன் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி காவல்துறை ஆணையர் ஹர்ஷ் வர்தன், இந்திய குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்டதைப் பயன்படுத்தி வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்தியக் குடியுரிமைச் சட்டத்தால் இந்தியக் குடிமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் காவல்துறை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments