தி.மு.க.வை களங்கப்படுத்த பா.ஜ.க. செய்யும் அரசியல் எடுபடாது - அமைச்சர் ரகுபதி

0 243

தமிழ்நாட்டில் இருந்து ஜாபர் சாதிக் போதைப் பொருட்களை கடத்தவில்லை என்றும் வேறுமாநிலங்களில் அவர் கடத்தலில் ஈடுபட்டபோதுதான் பிடிபட்டதாகவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் பேட்டியளித்த அவர், தி.மு.க.வை கொச்சைப்படுத்தும் நோக்கிலேயே போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றதாக கூறினார்.

பிப்ரவரி 15ஆம் தேதி தேடப்படும் குற்றவாளியாக ஜாபர் அறிவிக்கப்பட்ட நிலையில், பிப்ரவரி 21ல் நடந்த மங்கை திரைப்பட விழாவில் அவர் பங்கேற்றதாகவும், அப்பொழுது என்.சி.பி எங்கே போனது? என்றும் ரகுபதி கேள்வி எழுப்பினார்.

போதைப்பொருள் விவகாரத்தில் ஆதாரம் இல்லாமல் தி.மு.கவினர் மீது குற்றம்சாட்டுபவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என எம்.பி.வில்சன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments