காவல் ஆய்வாளர் வீட்டில் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி கொள்ளை

0 279

கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் காவல் ஆய்வாளர் கவிதாவின் வீட்டில் கொள்ளையடித்த திருடர்கள் கூடுதலாக பணமும் நகையும் வைத்திருக்கலாமே என்ற குறிப்பை அவர் புகைப்படத்தின் மீது எழுதி வைத்துவிட்டுச் சென்றனர்.

கவிதா காரைக்குடியில் பணியாற்றுவதால், சொந்த ஊரில் உள்ள வீடு பூட்டப்பட்டிருந்தது. கடந்த ஏழாம் தேதி இரவு பூட்டி இருந்த கவிதாவின் வீட்டின் பூட்டுகளை உடைத்து உள்ளே சென்று தங்கம் வெள்ளி போன்றவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.

அவர்கள் எதிர்பார்த்த அளவுக்குப் பொருட்கள் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் குறிப்பு எழுதிச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments