பிரதமர் புஷ்ப கமல் தஹால் அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டது நேபாள காங்கிரஸ்

0 248

நேபாளத்தில் பிரதமர் புஷ்ப கமல் தஹால் தலைமையிலான அரசுக்கு அளித்த வந்த ஆதரவை நேபாள காங்கிரஸ் விலக்கிக்கொண்டது.

இதையடுத்து புதிய கூட்டணியை உருவாக்கியுள்ள பிரதமர், மார்ச் 13-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோர உள்ளார். பிரதமராக புஷ்ப கமல் தஹால் பதவியேற்ற கடந்த 15 மாதங்களில் மூன்றாவது முறையாக அவர் நம்பிக்கை வாக்கு கோர உள்ளார்.

புஷ்ப கமால் தஹாலின் சிபிஎன்-மாவோயிஸ்ட் கட்சியுடன், சிபிஎன்-யுஎம்எல், ராஷ்ட்ரீய சுதந்திரா கட்சி, ஜனதா சமாஜ்வாதி கட்சி ஆகியவை சேர்ந்து புதிய கூட்டணி உருவாகியுள்ளது.

அறுதிப்பெரும்பான்மைக்கு 138 இடங்கள் தேவை என்ற நிலையில், புதிய கூட்டணிக்கு 142 இடங்கள் உள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments