உறவினர்கள், ரத்த சொந்தங்களை காப்பாற்றவே எதிர்க்கட்சிகள் அதிக அக்கறை எடுத்துக்கொள்கின்றனர் - பிரதமர் மோடி

0 198

காங்கிரஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் நாட்டையும் நாட்டு மக்களையும் பற்றிக் கவலைப்படாமல் தங்களது உறவினர்களையும், ரத்த சொந்தங்களையும் காப்பாற்றவே அதிக அக்கறை எடுத்துக்கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் 4500 கோடி ரூபாய் மதிப்புள்ள உள்கட்டமைப் திட்டங்களை அவர் தொடங்கிவைத்துப் பேசினார். மேற்கு வங்கத்தில் ஆட்சியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ், மக்கள் நலத் திட்டங்களுக்கு மத்திய அரசு வழங்கும் பணத்தை பல ஆண்டுகளாகக் கொள்ளையடித்து வருவதாகவும், அதற்காக 25 லட்சம் போலி வேலை அட்டைகள் உருவாக்கப்பட்டதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

கடந்த பத்து ஆண்டுகளாக மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவதாகவும், ஆனால் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளையும், ஏழைகளை சுரண்டுவதையுமே திரிணமூல் காங்கிரஸ் செய்துவருவதாகவும் அவர் விமர்சித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments