புதுச்சேரியில் சிறுமியின் உயிரிழப்புக்கு நீதிகேட்டு இண்டியா கூட்டணி மற்றும் அ.தி.மு.க. சார்பில் முழு அடைப்பு போராட்டம்

0 261

புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட சிறுமி உயிரிழப்பிற்கு நீதிகேட்டு திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் சார்பில் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படாததால் போக்குவரத்திற்கு சிரமம் ஏற்பட்ட நிலையில், சாலைகள் வெறிசோடி காணப்படுகின்றன. பெட்ரோல் பங்க்களும் இயக்கப்படாததால் பெட்ரோல் போட வந்த வாகன ஓட்டிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

காமராஜர் சதுக்கம் அருகே இண்டியா கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, எதிர்க்கட்சி தலைவர் சிவா உள்பட திரளானோர் பங்கேற்றனர்.

தடையை மீறி ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்ததால் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அண்ணா சிலை அருகே அதிமுக சார்பில் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் கூடியவர்கள் போதைப் பொருள் விற்பனையை தடுக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments