போதை மருந்து கும்பலுக்கு மூளையாக செயல்பட்டவன் கைது

0 306

நாமக்கல் மாவட்டம் வெப்படையில், கூலி தொழிலாளர்களுக்கு போதை மருந்து வழங்கிய கும்பலுக்கு மூளையாக செயல்பட்டவனை குஜராத் மாநிலத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

கூலித்தொழிலாளர்கள் சிலர் வலி நிவாரணி மாத்திரைகளை நீரில் கரைத்து, ஊசி வழியாக உடலில் செலுத்தி போதை ஏற்றிக்கொள்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இது தொடர்பாக 15 பேரை கைது செய்த போலீசார், அவர்களுக்கு கொரியர் மூலம் வலி நிவாரணிகளை அனுப்பியதாக கூறப்படும் சித்திக் சவுத்ரி என்பவனை குஜராத் சென்று கைது செய்ததுடன், அவனது நண்பர்கள் 4 பேரையும் ஈரோட்டில் கைது செய்தனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments