நகைக் கடையில் கைவரிசை காட்டிய பெண் ஊழியர் கைது

0 307

சென்னை நங்கநல்லூரில், கணவரின் சிகிச்சைக்காக நகை கடையில் இருந்து நகைகளை திருடிய பெண் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

கடையிலிருந்து நகைகள் மாயமாவதாக உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் ஊழியர்களிடம் போலீசார் கிடுக்கிபிடி விசாரணை நடத்தினர்.

2 மாதங்களுக்கு முன் பணியில் சேர்ந்த ரமா பிரியா என்பவர், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட தமது கணவரின் சிகிச்சைக்காக தினமும் ஒரு சவரன் வீதம், 5 நாட்களில் 5 சவரன் நகைகளை திருடியதாக ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments