சாலையில் சென்ற வாகனங்களை வழி மறித்து 2 போதை ஆசாமிகள் ரகளை... தட்டிக்கேட்ட சாலைப் பணியாளர் வெட்டிக்கொலை

0 306

நெல்லை மாவட்டம் வெள்ளங்குளி அருகே சாலை பணியாளரை கொன்றுவிட்டு, காவலர் ஒருவரையும் அரிவாளால் வெட்டிய நபரை போலீசார் சுட்டு பிடித்தனர். 

கடந்த வாரம் சிறையில் இருந்து ஜாமீனில் வந்த பேச்சிதுரையும், அவனது கூட்டாளி சந்துருவும், மது போதையில் கார் ஒன்றை வழிமறித்து ரகளை செய்ததாக கூறப்படுகிறது.

அதனை தட்டிக்கேட்ட சாலை பணியாளர் கருப்பசாமியை அவர்கள் அரிவாளால் வெட்டி கொன்றுவிட்டு, வழியில் தென்பட்ட அரசு பேருந்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கியதாக சொல்லப்படுகிறது.

தகவல் அறிந்து அங்கு சென்ற தலைமை காவலர் செந்தில் குமாரையும் அரிவாளால் வெட்டி விட்டு அருகில் உள்ள வாழைத்தோட்டத்துக்குள் பதுங்கியிருந்த பேச்சிதுரையை துப்பாக்கியால் காலில் சுட்டு பிடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அவனது கூட்டாளி சந்துருவையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments